மாணவர்களை சாதிப்பிரிவை குறிப்பிட்டு தகாத வார்த்தையால் திட்டிய பேராசிரியர்.
கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில், பட்டியல் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒரு வருட சிறப்பு ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வருகிறது. அவ்வாறு ஆன்லைன் வகுப்பு நடத்திய மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் சீமா அவர்கள் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களை வெட்கம்மற்றவர்கள் என்று தகாத வார்த்தையால் சாதிப் பிரிவை குறிப்பிட்டு திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேசிய கீதத்துக்கு மாணவர்கள் எழுந்து நிற்காத காரணத்தினால் ஆசிரியர் சீமா இவ்வாறு திட்டியதாக கூறப்படுகிறது. ஆசிரியர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இந்த வீடியோ அந்த தொழில்நுட்ப கழக இயக்குனர் பார்வைக்கு சென்றுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் பேராசிரியர் அழைத்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. எங்கள் கல்விக்கூடத்தில் இதுபோன்று நடத்தைகளுக்கு இடமில்லை. இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…