இந்தியர்களை மீட்பதில் சிக்கல்… பாதியில் திரும்பிய இந்திய விமானம் ..!

Published by
murugan

உக்ரைன் சென்ற ஏர் இந்திய விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது. 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ள நேட்டோ என்ற 12 நாடுகளை ஒருங்கிணைத்த கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா தீவிரம் காட்டி வந்தது. ரஷ்யா தனது படைகளை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்தது. இதற்கிடையில், உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா சிறப்பு விமானம் இந்தியாவில் இருந்து இயக்கப்பட்டது. இன்று உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி விட்டது. இந்நிலையில், போர் நடைபெற்று வருவதால் உக்ரைன் சென்ற ஏர் இந்திய விமானம் நடுவானில் தவித்த நிலையில் மீண்டும் விமானம் டெல்லி திரும்பியது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்திய விமானம் , போர் தொடங்கியதால் மீண்டும் திரும்பியது. டெல்லிக்கு மீண்டும் விமானம் திரும்பியதால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

2 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

7 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

12 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

34 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

51 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago