தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27-ம் தேதி கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக முகமது , சிவா , நவீன் , சின்னகேஷ்வலு ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு குற்றவாளி நான்கு பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் நான்கு பெரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிய முயன்றபோது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு மக்கள் பலர் தெலுங்கானா போலீசாரை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் பிரியங்கா தந்தை ANI-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் , எனது மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. என்கவுண்டரில் நான்கு பேரை கொல்லப்பட்டது எனக்கு நிம்மதியை தருகிறது.அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இப்போது என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும் என கூறினார்.
என் மகள் அனுபவித்த வேதனைக்கு பதில் கிடைத்துள்ளது. இது மற்றவர்களுக்கும் ஒரு உதாரணமாக இருக்கட்டும். தெலுங்கானா போலீஸ் வேகமாக செயல்பட்டு உள்ளது.போலீசாருக்கு மிக்க நன்றி. இந்த கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மீடியாதான்.
மீடியா அவர்களால் தான் இந்தியா முழுவதும் இந்த கொலை சம்பவத்தை கொண்டு சென்றனர். எனவே மீடியா அவர்களுக்கு மிக்க நன்றி என பிரியங்கா தந்தை கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…