தலைநகர் தில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து வெளியேறிய, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், அவர் விரைவில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவிற்கு சென்று, அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கவும் முடிவு செய்து உள்ளார்.
வரும், 2022ல், உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவே, அங்கு அவர் முகாமிட முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது, உத்தர பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இளம் பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் கொதித்தெழுந்த பிரியங்கா, அம்மாநில அரசுக்கு எதிராக, தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளார். பிரியங்கா களத்தில் இறங்கியதும், அவருடன் ராகுல் காந்தியும் சேர்ந்து கொண்டார். மாநில அரசுக்கு எதிராக, தினமும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார் பிரியங்கா. மற்ற எதிர்க்கட்சிகளும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ‘மேடம், ராகுலையே முந்திவிட்டார்; இவரை வைத்து தான் இனி அரசியல் நடத்த வேண்டும். காங்கிரஸ் பிழைக்க இது தான் வழி’ என்கின்றனர், கட்சியின் மூத்த தலைவர்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…