Categories: இந்தியா

அண்ணன் – தங்கை பாசத்தை பொழிந்த ராகுல், பிரியங்கா.!

Published by
கெளதம்

டெல்லி : ரக்‌ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, ராகுல் காந்த மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.

ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக, வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான பண்டிகை. ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) என்பது சகோதரர் மற்றும் சகோதரி இடையே உள்ள அன்பையும், பாதுகாப்பையும் வெளிப்படுத்துகிறது.

இந்த பண்டிகையின் போது, சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ‘ராகி’ என்று அழைக்கப்படும் ஒரு கயிற்றை கட்டி, அன்பை வெளிப்படுத்துகிறார்கள். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு, தனது வாழ்த்துகளை சமூக வலைதளமான X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ” ரக்‌ஷா பந்தன் திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் – தங்கைக்கு இடையே உள்ள அழியாத அன்பு மற்றும் பாசத்தின் அடையாளம் இந்த பண்டிகை. இந்த பாதுகாப்பு கயிறு, எப்போதும் உங்கள் புனிதமான உறவை வலுவாக வைத்திருக்கட்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரியங்கா காந்தியும் தனது எக்ஸ் தள பக்கத்தில் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், “அண்ணனுக்கும் – தங்கைக்கும் இடையிலான வானது ஒரு பூச்செடி போன்றது. அதில் வெவ்வேறு வண்ணங்களில் நினைவுகளும், ஒற்றுமையின் கதைகளும், நட்பும் நிறைந்திருக்கும். அது ஆழமாக்கும் வகையில், அன்பு மற்றும் மனசு விட்டு புரிதலோடு செழித்து வளரும். உங்கள் அனைவருக்கும் இனிய ராக்கி நல்வாழ்த்துக்கள் ” என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ஒருவருக்கொருவர் தங்களது அண்ணன் தங்கை பாசத்தை பகிர்ந்து கொண்டனர்.

Published by
கெளதம்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

2 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

2 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

2 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

3 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

3 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

3 hours ago