பாம்பாட்டிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த பிரியங்காகாந்தி !
மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், அனைத்து இடங்களிலும் மிக விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர், பாம்புகளை தனது கையில் பிடித்து பார்த்து பாம்பாட்டிகளிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டார்.