உத்திரபிரதேச ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மதுரா நகரில் 17 வயது சிறுமியை 2 ஆவது மாடியிலிருந்து 3 இளைஞர்கள் தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அந்த 3 இளைஞர்களும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் எதிர்க்கட்சிகள் அனைவரும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்ககோரி வருகின்றனர். மேலும், இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கேட்டால் ஆன்மா நடுங்குகிறது. ஆனால் மாநில அரசு தூங்குகிறது. இந்த ஜங்கிள் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கைகளில் தான் இருக்கிறது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…