கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சை வழங்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள், சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க அனுமதியை விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனை இழந்தது. ஹைதராபாத்தில் அனுமதியை இழந்த இது இரண்டாவது தனியார் மருத்துவமனையாகும்.
இதற்கு முன் டெக்கான் மருத்துவமனை என்ற மருத்துவமனை இதேபோன்ற புகார்களுக்காக கடந்த திங்களன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனுமதியை இழந்தது. கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மூலம் அதிக புகார்கள் வந்தால் தனியார் மருத்துவமனைகள் இதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…