தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர், இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத நேரத்தில் இஸ்ரோவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் எனவும், இதற்காக ஒரு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய 500 நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் நிறுவனங்கள் செயல்படக்கூடிய பரந்துபட்ட பகுதிகள் பிரிவுகள் பொருட்களையும், இயந்திர வடிவமைப்புகளையும், மின்னணு வடிவமைப்புகளையும், சிஸ்டம் மேம்பாடுகளையும், ஒருங்கிணைப்பு களையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க ஊக்குவிக்கப் பட்டு வருவதாகவும் அரசின் முடிவை விஞ்ஞானிகள் வரவேற்பதாகவும் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…