கொரோனா வார்டில் கைவிலங்குடன் மது அருந்தும் குற்றவாளியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் எனுமிடத்தில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக சாந்து குப்தா என்பவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறைக்குச் செல்வதற்கு முன்பாக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டஅவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியது. இதனை அடுத்து தன்பாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பதாக சாந்து குப்தா கைவிலங்குடன் கொரோனா வார்டில் மது குடிப்பது போன்றும், வகைவகையான உணவு உண்பது போன்றும் கைதி படத்தில் வருவது போல கைவிலங்குடன் கலக்கல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியது.
இந்த புகைப்படம் வைரலாகியதை தொடர்ந்து இவ்வளவு சகல வசதியுடன் அதுவும் கொரோனா வார்டில் மது கொடுத்து உணவு கொடுத்தது யார் என பலராலும் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் மாவட்ட நிர்வாகத்திடம் புகைப்படத்தின் உண்மை தன்மையை அறியுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். இதன்படி சாந்து குப்தாவின் புகைப்படம் உண்மை என நிரூபிக்கப்பட்டது. இது குறித்து தாற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…