கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது – பிரதமர் மோடி

Published by
லீனா

கொரோனா நெருக்கடி காலத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் பயனாளிகளிடம் உரையாடினார் . அப்போது பேசிய அவர், கொரோனா நெருக்கடியின் போது 80 கோடி இந்தியர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது. ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்கள் கூட வழங்கப்பட்டன.  கடந்த நூறு ஆண்டுகளில் மனித இனம் சந்தித்திராத பேரிடர் கொரோனா தொற்று என கூறினார்.

மேலும், மத்திய பிரதேசத்தில், பல மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது துரதிர்ஷ்டவசமானது. பலரின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நெருக்கடியான காலங்களில் மத்திய அரசோடு, முழு தேசமும் துணை நிற்கிறது என தெரிவித்தார்.

மேலும், முகக்கவசம் அணிந்தல், சானிடைசர் உபயோகப்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடை பிடித்தல் போன்றவை மக்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரதான் மந்திரிகரீப் கல்யாண் அன்ன யோஜனா, பிரதான் மந்திரி ரோஸ்கர் யோஜனா உள்ளிட்ட திட்டங்களில் ஏழை மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும், முதல் நாளிலிருந்தே ஏழை மக்களின் உணவு மற்றும் வேலை வாய்ப்புகளில் கவனம் செலுத்தபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா
Tags: #Corona#Modi

Recent Posts

அமர்களப்படுத்திய பாகிஸ்தான் மகளிர் அணி! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

அமர்களப்படுத்திய பாகிஸ்தான் மகளிர் அணி! 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஷார்ஜா : மகளிருக்காக நடைபெற்று வரும் உலகக்கோப்பைத் தொடரில் 2-வது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியும்,…

2 hours ago

அப்டேட்டை குவிக்கும் ‘தளபதி 69’ படக்குழு.. லிஸ்ட் ரொம்ப நீளமா போகுது.!

சென்னை : இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் "தளபதி 69" படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.…

6 hours ago

போராடி தோல்வியடைந்த ஸ்காட்லாந்து மகளிர் அணி! வங்கதேச மகளிர் அணிக்கு முதல் வெற்றி!

ஷார்ஜா : மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரானது இன்று கோலாகலமாக ஷார்ஜாவில் தொடங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியாக வங்கதேச…

6 hours ago

சமந்தா விவாகரத்து பற்றி அமைச்சர் சுரேகா அவதூறு பேச்சு! வழக்கு தொடர்ந்த நாகர்ஜுனா?

சென்னை : நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்.…

6 hours ago

இரண்டாவது பாகத்துக்கு விழுந்த அடி! இந்தியன் 3 குறித்து லைக்கா எடுத்த முடிவு?

சென்னை : இந்தியன் முதல் பாகம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படங்களின் பட்டியலில் எப்போதும் இருக்கும் என்பதில் எந்த…

7 hours ago

தப்பிய விமானம்! ஜப்பானில் வெடித்த இரண்டாம் உலகப் போர் குண்டு!

மியாசகி : இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஜப்பான் மீது வலுவான விமானப்படை இருந்தும் அமெரிக்கா அணுகுண்டை வீசியது. இதனால், ஜப்பான்…

7 hours ago