கடந்த 5 மாதங்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்றும் மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்று இரண்டாவது நாளான அவையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. அப்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பிரதமர் கிசான் திட்டம் மோசடி குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கிஸான் திட்டத்தில் கடந்த கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.38,282 கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சமீபத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் கிசான் திட்டத்தில் சில போலியான பயனாளிகள் சோ்க்கப்பட்டதாக தெரியவந்தது. சில மாவட்டங்களில் இதுபோன்ற முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது என்றும் கூறியுள்ளார். முறைகேடாக பயனடைந்தவா்களிடம் இருந்து ரூ.47 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 வழக்குகளைப் பதிவு செய்து, தமிழக சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பிரதமர் உழவர் உதவி நிதி திட்டத்தை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு என்றும் நிலம் வைத்துள்ள, நிதி உதவி பெற தகுதி உள்ள விவசாயி யார் என்பதை கண்டறிவது மாநில அரசின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…