பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைக்கும் மற்றொரு கௌவுரவம்…!சீயோல் அமைதி விருது அறிவிப்பு …!
2018 ஆம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சாம்பியன்ஸ் ஆப் தி எர்த்’ விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டது.
மேலும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை தலைமையேற்று வழிநடத்துவதற்காகவும் இந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் என உறுதியேற்றதற்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான சீயோல் அமைதி விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சீயோல் கமிட்டி கூறுகையில், உலக அமைதிக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய பங்களிப்புக்காக விருது என்று சீயோல் கமிட்டி விளக்கம் அளித்துள்ளது.