டெல்லி:பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 10-வது தவணை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விடுவித்துள்ளார்.
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக ஒரு வருடத்திற்கு ரூ 6,000 வழங்கப்பட்டு வருகிறது.அதாவது,நான்கு மாதத்துக்கு ஒரு முறை ரூ.2,000 என ஒரு வருடத்தில் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,இத்திட்டத்தின் மூலம் விவசாயக் குடும்பங்களுக்கு இதுவரை ரூ.1.6 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக,இதுவரை 9 தவணை முறையில் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,புத்தாண்டின் முதல் நாளில் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி’ (PM-KISAN) திட்டத்தின் கீழ்,விவசாயிகளுக்கான 10-வது தவணை உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தற்போது விடுவித்துள்ளார்.
இதன்மூலம்,10 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.20,000 கோடி நிதி இன்று விடுவிக்கப்பட்டு நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில்,பிரதமருடன் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உடனிருந்தார்.
இதனைத் தொடர்ந்து,சுமார் 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPOs) ரூ.14 கோடிக்கும் அதிகமான பங்கு மானியத்தையும்(equity grant) பிரதமர் வெளியிட்டுள்ளார்.இதன் மூலம் 1.24 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…