குஜராத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர், எந்த எதிர்ப்பின்றி பூபேந்திர படேல் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு கடந்த 13-ஆம் தேதி காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் பதவி ஏற்று கொண்டார்.
இதனையடுத்து,இன்று குஜராத் ஆளுநர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா காந்திநகரில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் முன்னிலையில் நடைபெற்றது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலையில் புதிய அமைச்சரவையில் மொத்தம் 24 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில்,புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பாஜக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மிகச்சிறந்த காரியகார்த்தாக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“குஜராத் அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைத்து கட்சி சகாக்களுக்கும் வாழ்த்துக்கள். இவர்கள் பொது சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, பாஜக கட்சியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பரப்பிய மிகச்சிறந்த காரிய கர்த்தாக்கள். இனிவரும் காலங்கள் பலனளிக்கும் வகையில் வாழ்த்துகள்.”,என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில்,குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலின் கீழ் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக இன்று அம்மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேடி தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…