சாலையில் கிடந்த குப்பைகளை வெறுங்கையால் அகற்றிய பிரதமர் நரேந்திர மோடி…!

Default Image

புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பார்வையிட்ட பிரதாமற் மோடி, அங்கு கிடந்த குப்பைகளை பிரதமர் வெறும் கைகளால் அகற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் கீழ் புதிதாக திறக்கப்பட்ட ஐ.டி.பி.ஓ. சுரங்கப்பாதையை ஆய்வு செய்தார். 920 கோடி ரூபாய் மத்திப்பில் அமைக்கப்பட்ட பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தின் முக்கிய சுரங்கப்பாதை மற்றும் 5 சிறு சுரங்கப் பாதைகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

அப்போது, புதிதாகத் தொடங்கப்பட்ட சுரங்கப்பாதையைப் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, அங்கு கிடந்த குப்பைகளை பிரதமர் வெறும் கைகளால் அகற்றினார். மேலும், சுரங்கப்பாதையில் நடந்து செல்லும்போது, அங்கு கிடந்த காலி தண்ணீர் பாட்டில் மற்றும் பிற குப்பைகளையும் அப்புறப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்