சென்னை : பிரதமர் மோடியின் சொத்துமதிப்பு 3.02 கோடி ரூபாய் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்.
2014 மற்றும் 2019 வெற்றியை தொடர்ந்து மீண்டும் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடைசி கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பிரதமர் மோடியின் வேட்புமனுவில் குறிப்பிட்டபடி, அவரது மொத்த சொத்து மதிப்பு 3.02 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. 2.85 கோடி ரூபாய் வங்கியில் வைப்பு தொகையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2014 முதல் 10 ஆண்டுகால பிரதமர் பதவியிலும், அதற்கு முன்னர் 3முறை குஜராத் முதல்வராக இருந்துள்ளார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் என எதுவும் இல்லை என்றும், சொந்தமாக எந்தவித வாகனங்களும் இல்லை என்றும், ரொக்கமாக 52 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, 1978ஆம் ஆண்டு டெல்லியில் பி.ஏ பட்டம் பெற்றதாகவும், 1983ஆம் ஆண்டு குஜராத்தில் முதுகலை பட்டம் பெற்றதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…