சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், தடுப்பூசி போட்டபின் வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறுவதுண்டு. இது குறித்து பல்வேறு சர்ச்சையான பேச்சுகள் எழுந்த போதும், மத்திய அரசு சார்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
மக்களுக்கு போதுமான தடுப்பூசியை, மத்திய அரசால் வழங்க இயலாத காரணத்தால் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் மூலமாக தாங்களாகவே தடுப்பூசிகளை வாங்கி மக்களுக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன் பதிவினை செய்ய, கோவில் இணையதளத்தை மத்திய அரசு ஆரம்பித்தது. அது போல ‘சி ஜி டீக்கா’ என்ற பெயரில் சத்தீஸ்கர் அரசு தனியாக ஒரு இணைய பக்கத்தை உருவாக்கி 18 வயது முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி முன்பதிவு மேற்கொண்டு வருகிறது. இந்த இணையத்தில் பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு, சத்தீஸ்கர் அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு பதிலாக, சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பஹால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கூறுகையில், யாருடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற போட்டி போட வேண்டிய நேரம் இது கிடையாது. இதன் மூலம் விளம்பரங்களை தேடும் சத்தீஸ்கர் அரசு உடனடியாக தங்களது இதுபோன்ற நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், டி.எஸ்.சிங்தியோ 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நிதியினை மாநில அரசு கொடுக்கிறது. மத்திய அரசு பணம் கொடுக்கும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறும்போது, மாநில அரசு செலவு செய்யும் சான்றிதழில் முதல்வர் படம் ஏன் இருக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…