அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் புரட்சி இருந்தால் தான் நமது நாட்டின் வளர்ச்சி பிரதமர் மோடியின் கருத்து.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
  • அதில் மோடி பேசுகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வெற்றியில் தான் நமது நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைகழகத்தில் 107-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிறகு பிரதமர் மோடி பேசுகையில், வான்வெளி ஆராய்ச்சியில் சாதனை புரிந்து வருவது போல் நாம், ஆழ்கடல் பற்றிய ஆராய்ச்சியையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். பின்னர் விவசாயத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கும், நாடு முழுவதும் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதற்கும், தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண வேண்டும் எனவும் மோடி அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து கூறுகையில், நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஆன்லைன் வணிகம், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட சேவைகள் கிராம புறங்களில் பரவி உள்ளது என்றும், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகள் நேரடியாக ஆன்லைன் சந்தையில் விற்பனை செய்கின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் வெற்றியில் தான் நமது நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்று மோடி குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

2 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

2 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

4 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

5 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

6 hours ago