இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று மக்களிடம் உரையாற்றினார்.மாநிலங்கள் இனிமேல் தடுப்பூசிக்காக செலவு செய்ய தேவையில்லை. ஜூன் 21-ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் இவரது அறிவிப்பிற்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து, அவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் முதல் பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் நான்கு மாதங்களாக செய்யப்படவில்லை. மிகுந்த அழுத்தத்திற்கு பின் மாநில அரசும் பேச்சை கேட்டுக் கேட்டு உள்ளார்.
இதனை அமல்படுத்த பிரதமர் மோடிக்கு நான்கு மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். கொரோனா பரவிய காலம் முதலே மக்களின் நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடியின் தாமதமான முடிவு ஏற்கனவே பலரது உயிரை வாங்கி விட்டது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசியலாக இல்லாமல் மக்களுக்கானதாக இருக்கும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…