புதுடெல்லி : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே செல்கிறார்.
இதன்மூலம் புரூனே செல்லும் முதல் இந்தியத் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுகிறார். புருனே பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார், புருனேயுடனான உறவுகள் குறித்து பிரதமர் மோடி கலந்தாலோசிக்கவுள்ளார்.
புருனே பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் செல்கிறார். ஆம், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் மோடி செப்டம்பர் 4-5 தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார்.
ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூரருக்கு செல்லும் பிரதமர் மோடி, இந்த பயணத்தின் போது, அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்தினத்தை சந்தித்து உரையாடவுள்ளார். சிங்கப்பூரில் இருந்து வரும் தொழில் அதிபர்களையும் பிரதமர் சந்தித்துப் பேசுவார் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அடுத்த இரண்டு நாட்களில், புருனே தருஸ்ஸலாம் மற்றும் சிங்கப்பூருக்குச் செல்கிறேன். இந்த நாடுகளின் பல்வேறு ஈடுபாடுகளின் போது, அவர்களுடன் இந்தியாவின் உறவுகளை மேலும் விரிவு செய்ய கவனம் செலுத்தப்படும்.
இந்தியா-புருனே தருஸ்ஸலாம் இரு நாட்டு உறவுகள் 40 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன. மகத்தான அதிபர் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…