இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழாவான இன்று பிரதமர் மோடி,குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
இந்திய விமானப்படையின் ஆண்டு விழா,ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 8 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இன்று இந்திய விமானப்படையின் 89 வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,இந்திய விமானப்படை என்றால் விடாமுயற்சி என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“விமானப்படை தினத்தில் நமது விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள். இந்திய விமானப்படை என்றால் தைரியம், விடாமுயற்சி மற்றும் தொழில்முறைக்கு ஒத்ததாகும். அவர்கள் நாட்டைப் பாதுகாப்பதிலும், சவால்களின் போது தங்கள் மனிதாபிமான உணர்வின் மூலமும் தங்களை வேறுபடுத்திக் கொண்டுள்ளனர்”,என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல,நாட்டின் குடியரசுத்தலைவர் ராஜ்நாத் சிங் அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“அனைத்து இந்திய விமானப்படை பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விமானப்படையின் 89 வது ஆண்டு நிறைவுக்கு அன்பான வாழ்த்துக்கள். பலவிதமான சவால்களுக்கு மத்தியில் நாட்டை அமைதியுடனும் நெகிழ்ச்சியுடனும் வைத்ததற்காகவும், தேசத்திற்கான சேவையில் உறுதியாக இருப்பதற்காகவும் நமது விமானப்படை வீரர்களை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம்”,என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லி : இன்று இந்திய ரயில்வே துறையின் சார்பாக காலியாக உள்ள 32,438 RRB லோகோ பைலட் பணியிடங்களுக்கு தேர்வு…
சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று (மார்ச்19) தாக்கல் செய்தார். சென்னை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…