இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த 24ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தொடர்பான தகவல்களை காணொளி காட்சி மூலம் மோடி உரையாற்றி வருகிறார். அதேபோல் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதையடுத்து இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள் என்றும் நாம் எடுக்கும் நடவடிக்கைகைகள் உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி என மோடி தெரிவித்தார். வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். மேலும் அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள் என்றும் இந்தியாவின் மக்கள் ஊரடங்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…