பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப்!

Published by
Rebekal

டெல்லி எல்லையை அடைத்ததற்காக பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி கலவரத்தில் முடிந்த நிலையில், எல்லைக்குள் நுழையும் விவசாயிகளை தடுப்பதற்காக டெல்லியில் சிமெண்ட் தடுப்புகள், முள் வேலிகள் அமைக்கப்பட்டு ருந்தது.

தற்போது அப்பகுதியில் நிலைமை சீரடைந்து வருவதால் டெல்லியில் உள்ள தடுப்புகள் மற்றும் வேலிகளை போலீசார் அகற்ற தொடங்கியுள்ளனர். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும், சாலைகளை அடைப்பதற்கு உரிமை இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியது. சாலைகளை அடைத்ததற்கு போலீஸ் தான் பொறுப்பு என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தடுப்புகளை அகற்றும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, சாலைகளை அடைத்துக் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்க்காக நாட்டு மக்களிடமும், உச்ச நீதிமன்றத்திடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறியுள்ளார். மேலும் சாலைகளை அடைத்தது விவசாயிகள் அல்ல, காவல்துறை என்பது இப்போது தான் தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

Live : புனித வெள்ளி தினம் முதல்.., உள்ளூர், உலக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…

1 minute ago

அந்த 300 ரன்கள் எங்கப்பா? வாய்விட்ட முன்னாள் SRH பயிற்சியாளர்! வறுத்தெடுக்கும் ஐபிஎல் ரசிகர்கள்!

மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

59 minutes ago

அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…

2 hours ago

“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு!

"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…

2 hours ago

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

10 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

12 hours ago