ஊழல்வாதிகள் யாரும் தப்பிவிட கூடாது.! சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேச்சு.!

Published by
மணிகண்டன்

ஊழல்வாதிகள் யாரும் தப்பிவிட கூடாது. ஊழலுக்கு எதிராக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது என சிபிஐ வைர விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

மத்திய புலனாய்வு துறையான சிபிஐ (CBI) இந்தியாவில் 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு வைரவிழா ஆண்டை சிபிஐ கொண்டாடி வருகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.

சிபிஐ பொறுப்பு :

அப்போது அவர் பேசுகையில், தொழில்வளம் மற்றும் திறமையான நிறுவனங்கள் இல்லாமல் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை. அந்த வகையில் சிபிஐக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது என்று மோடி பேசினார்.

ஊழல்வாதிகள் தப்பக்கூடாது :

மேலும், ஜனநாயகம் மற்றும் நீதிக்கான மிகப்பெரிய தடையாக ஊழல் இருக்கிறது என்றும், ஊழலில் இருந்து இந்தியாவை விடுவிப்பதே சிபிஐயின் முக்கியப் பொறுப்பு என்றும், ஊழல் செய்யும் ஊழல்வாதிகள் யாரும் தப்பி விடக்கூடாது இதுவே நாட்டு மக்களின் விருப்பம் என தெரிவித்தார்.

கருப்பு பணம் – பினாமி சொத்துக்கள் :

வங்கி மோசடிகள் முதல் வனவிலங்குகள் தொடர்பான குற்றங்கள் வரையில் சிபிஐயின் வேலையானது தற்போது விரிவடைந்துள்ளது. கறுப்புப் பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள தொடங்கியுள்ளது என்றும், ஊழல்வாதிகளை தவிர, ஊழலுக்கு எதிராகவும் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

1 second ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

18 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

27 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

3 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago