பிரதமர் மோடி அவர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் பெண்ணை புகழ்ந்து பேசி உள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றுவது உண்டு. அதன்படி இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், அஞ்சல் அட்டைகள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை என்னிடம் கூறியுள்ளனர். அவற்றில் பலவற்றை நான் படித்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் தாயம்மாள் என்ற பெண்ணை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், பொருளாதார நிலை சரியில்லாத போதும் தனது கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி கட்டமைப்புக்கு தாயம்மாள் ஒரு லட்சம் நன்கொடை அளித்தார் என பேசியிருந்தார்.
நாடு முழுவதும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமர் ஜவான் ஜோதி போல நமது தியாகிகள் தியாகமும் அவர்களின் பங்களிப்பும் அழியாத் தன்மை கொண்டது. உங்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக தேசிய போர் நினைவகத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்து வாருங்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…