திருப்பூர் இளநீர் விற்கும் தாயம்மாளை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி..!

Default Image

பிரதமர் மோடி அவர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் பெண்ணை புகழ்ந்து பேசி உள்ளார். 

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாற்றுவது உண்டு. அதன்படி இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய பிரதமர் மோடி அவர்கள், அஞ்சல் அட்டைகள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து கருத்துக்களை என்னிடம் கூறியுள்ளனர். அவற்றில் பலவற்றை நான் படித்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின்போது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளநீர் விற்கும் தாயம்மாள் என்ற பெண்ணை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், பொருளாதார நிலை சரியில்லாத போதும் தனது கல்வி விஷயத்தில் எதையும் விட்டுக் கொடுக்கவில்லை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி கட்டமைப்புக்கு தாயம்மாள் ஒரு லட்சம் நன்கொடை அளித்தார் என பேசியிருந்தார்.

நாடு முழுவதும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிலர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமர் ஜவான் ஜோதி போல நமது தியாகிகள் தியாகமும் அவர்களின் பங்களிப்பும் அழியாத் தன்மை கொண்டது. உங்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கண்டிப்பாக தேசிய போர் நினைவகத்தில் குடும்பத்துடன் சென்று பார்த்து வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்