Categories: இந்தியா

சர்வதேச யோகா தினம்: ஸ்ரீநகரில் பிரதமர் மோடி யோகாசனம்.!

Published by
கெளதம்

ஜம்மு மற்றும் காஷ்மீர் : உடல் நலம் மற்றும் சமூக நல்லிணக்கத்தில் யோகாவின் உலகளாவிய தாக்கத்தை வலியுறுத்தி, 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீநகர் தால் ஏரிக்கரையில் யோகாசனம் செய்தார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியாவில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த யோகா தினத்தில் பங்கெடுத்த மக்களுக்கும், உலகெங்கும் யோகா செய்பவர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கவிருந்த நிகழ்ச்சி, கனமழையால் தடைபட்டது. பின்னர், ஏற்பாடுகள் வீட்டுக்குள் மாற்றப்பட்டன. தால் ஏரியில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு யோகா அமர்வுக்குப் பிறகு, காஷ்மீர் மக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், BSF வீரர்கள் மற்றும் பலருடன் இணைந்து பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நாடாபெட் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இன்று யோகா செய்தார். மேலும் மும்பையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் யோகாசனம் செய்தனர்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பித்தோராகரில் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் யோகா செய்தார். பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி ​​மற்றும் பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே ஆகியோர் சர்வதேச யோகா தினத்தையொட்டி பாட்லிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் யோகாசனம் செய்தனர்.

Published by
கெளதம்

Recent Posts

தீபாவளி தமாக்கா ! ‘iQOO 12’ போன் விரும்பிகளுக்கு அட்டகாசமான ஆஃபர்!

சென்னை : சந்தைகளில் ஐ-போன்களுக்கு இணையாக தற்போது விற்பனையாகும் பிராண்ட்களில் ஒன்று தான் iQ போன். என்னதான் சாம்சங், ஒன்…

46 mins ago

அடுத்த வாரம் பூமி பூஜை.. தவெக மாநாட்டை வெற்றி மாநாடாக மாற்றி தர வேண்டும் – புஸ்ஸி ஆனந்த்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான…

59 mins ago

நாளை முதல் வானத்தில் 2 நிலா.? காரணம் தெரியுமா.?

அமெரிக்கா : நாளை முதல் வானில் 2 நிலவுகள் தெரியும் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும்…

1 hour ago

கேரளாவில் 2-வது குரங்கு அம்மை தொற்று.. கண்காணிப்பு தீவிரம்.!

கொச்சி: குரங்கு அம்மை தடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என…

2 hours ago

லெபனான் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்! இஸ்ரேல் அறிவிப்பு..!!

லெபனான் : இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில்,ஹிஸ்புல்லா அமைப்பினரின் தலைமையகம் தரைமட்டமானது. அப்போது அந்த அமைப்பின் தலைவரான ஹசன்…

2 hours ago

ஆஸ்கர் விருதுகளை குவித்த ‘ஹாரி பாட்டர்’ நாயகி மேகி ஸ்மித் காலமானார்!

சென்னை : ஹாலிவுட்டில் தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம்…

2 hours ago