பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்தார். ராமர் கோவில் விவகாரத்தில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இதனால், சட்ட நடைமுறைகளுக்கு பின்னரே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
ரிசரவ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது அரசியல் நிர்பந்தம் எதுவும் இல்லை என்றும் ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே விலக போவதாக அவர் தெரிவித்தாக பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஊடகங்கள், பத்திரிகைகள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும், பிரதமர் மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார். தன்னைச் சுற்றி மட்டுமே பிரதமர் மோடி அரசியல் செய்வதாகவும் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
நியாயமான கேள்விகளுக்கும், மக்கள் படும் அவதிகளுக்கும், மோடியிடம் எந்த பதிலும் இல்லை என அவர் கூறினார். நான், எனது, எனக்கு, எனது செயல்பாடு என்ற அளவில் மட்டுமே அவரது பேட்டி அமைந்து இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…