இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ரூ.9,800 கோடி மதிப்பிலான “சர்யு நஹர் தேசிய திட்டம்”(நீர் கால்வாய் திட்டத்தை) உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூரில் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின் பல காரணங்களால் தடைபட்டு வந்த நிலையில், கடந்த2016-ஆம் ஆண்டிலிருந்து பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சயீ யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ. 9800 கோடி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் இதற்காக ரூ.4600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ககாரா, சரயு, ரப்தி, பங்கங்கா மற்றும் ரோகினி ஆகிய ஐந்து நதிகளை இணைக்கும் திட்டம் இதில் அடங்கும். இந்த திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.
மேலும், முக்கியமாக கிழக்கு உ.பி.யில் உள்ள 6,200 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 29 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் சர்யு நஹர் தேசிய திட்டத்திற்கான தொடக்க விழாவில் பேசிய பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்கு தண்ணீர் பஞ்சம் ஒரு தடையாக மாறாமல் இருப்பது முக்கியம். நதிநீரை சரியாகப் பயன்படுத்துவதே அரசின் முதன்மையான முன்னுரிமை. சாரியு நஹர் தேசிய திட்டத்தை நிறைவு செய்தது நேர்மையான நோக்கங்களுக்கும் திறமையான பணிக்கும் சான்றாகும்.
இந்த கொரோனா காலத்தில் எந்த ஒரு ஏழையும் பசியோடு தூங்கக் கூடாது என்பதற்காக தீவிரமாக உழைத்தோம். இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் ஹோலி பண்டிகை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…