டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் முதலிடம்.. உலக அளவில் பிரதமர் மோடிதான் டாப்!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக (70 மில்லியன்) அதிகரித்துள்ளது. 

உலகளவில் அரசியலில் தற்போது உள்ள தலைவர்களில் அதிகமாக பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரதமர் மோடி முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் சமூகவலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் கணக்கை தொடங்கிய பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படும் தலைவரானார்.

இதன்பின் படிப்படியாக அவரை ட்விட்டரில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமரை பின்தொடர்வோர் எண்ணிக்கை 6 கோடியை (60 மில்லியன்) நெருங்கியது. இந்த நிலையில், இவ்வாண்டு 2021 மேலும் அதிகரித்து, பிரதமர் மோடியின் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியை (70 மில்லியன்) தாண்டியுள்ளது.

இதனால் உலகளவில் தற்போது உள்ள தலைவர்களில் ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பிரதமரை தொடர்ந்து, போப் பிரான்சிஸ் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 5.30 கோடி ( சுமார் 50 மில்லியனுக்கு மேல்) உள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 3.90 கோடியாக உள்ளது.

இதனைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 2.63 கோடி (26.3 மில்லியன்) பேரும், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்காந்தி கணக்கை 1.94 கோடி (19.4 மில்லியன்) பேரும் பின்தொடர்கின்றனர்.

இதுபோன்று, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் கணக்கை 12 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். அதேபோல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கணக்கை 8.87 கோடி பேர் பின்தொடர்ந்தாலும் ட்ரம்ப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து! 

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

19 minutes ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

52 minutes ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

5 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

6 hours ago

திமுக எம்பிக்கள் கூட்டத்தில் முக்கிய 3 முடிவுகள்.! 7 மாநிலங்களில் 29 கட்சிகளுக்கு முதலமைச்சர் கடிதம்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…

6 hours ago