இன்று ஐ.நா சபையில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி நியூயார்க் சென்றடைந்துள்ளார்.
அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில், நேற்று இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இந்த மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர், துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து நடைபெற உள்ள ஐநா சபையின் 76-வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தற்பொழுது நியூயார்க் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றுள்ளனர்.
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…