டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றிய பிரதமர் மோடி…! நாட்டு மக்களுக்கு உரை…!

Default Image

டெல்லி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றிய பிரதமர் மோடி. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின், பிரதமருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,  டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசிய கோடியை ஏற்றினார். பிரதமர் மோடிக்கு தேசிய கோடியை ஏற்றி வைத்த பிறகு ஹெலிகாப்டரிலிருந்து மலர்கள் தூவப்பட்டன.

டெல்லி சுதந்திர தின விழாவில் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மேலும்,இந்த நிகழ்வில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையை சுற்றி, 350 கண்காணிப்பும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்