நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி பேச்சு.
டெல்லியில் இன்று முதல்வர்கள், நீதிபதிகள் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில், முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் சார்பில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு முதன்மை அங்கமாக நீதித்துறை அமைப்புகளில் தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு 1,800 பொருத்தமற்ற சட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, 1,450 சட்டங்கள் ஒழிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…