நாட்டு மக்கள் அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘நமது கிரகம், நமது ஆரோக்கியம்’. அதாவது,நமது கிரகம் மற்றும் அதில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த நலனில் உலகளாவிய கவனத்தை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் வாழ்த்து:
இந்நிலையில்,நாட்டு மக்கள் அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் எனவும்,இன்று சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகும்.ஏனெனில், அவர்களின் கடின உழைப்பே நமது பூமியைப் பாதுகாக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் – நமக்கு பெருமிதம்:
மேலும்,இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசு அயராது உழைத்து வருகிறது.அதன்படி,குடிமக்களுக்கு நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதாரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் நமது நாட்டில் இருப்பது என்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகு:
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறையில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது.பல புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. உள்ளூர் மொழிகளில் மருத்துவப் படிப்பை செயல்படுத்தும் எங்கள் அரசாங்கத்தின் முயற்சிகள் எண்ணற்ற இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகு கொடுக்கும்”,என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…