நாட்டு மக்கள் அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில்,இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் ‘நமது கிரகம், நமது ஆரோக்கியம்’. அதாவது,நமது கிரகம் மற்றும் அதில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த நலனில் உலகளாவிய கவனத்தை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமர் வாழ்த்து:
இந்நிலையில்,நாட்டு மக்கள் அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும்,அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும் எனவும்,இன்று சுகாதாரத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகும்.ஏனெனில், அவர்களின் கடின உழைப்பே நமது பூமியைப் பாதுகாக்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் – நமக்கு பெருமிதம்:
மேலும்,இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க மத்திய அரசு அயராது உழைத்து வருகிறது.அதன்படி,குடிமக்களுக்கு நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் சுகாதாரத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது.உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் நமது நாட்டில் இருப்பது என்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகு:
கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்வித் துறையில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது.பல புதிய மருத்துவக் கல்லூரிகள் வந்துள்ளன. உள்ளூர் மொழிகளில் மருத்துவப் படிப்பை செயல்படுத்தும் எங்கள் அரசாங்கத்தின் முயற்சிகள் எண்ணற்ற இளைஞர்களின் ஆசைகளுக்கு சிறகு கொடுக்கும்”,என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…
நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…
சென்னை : 2025-26ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது,…
சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30,…