நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மருத்துவக்கல்லூரி அமைக்க இலக்கு – பிரதமர் மோடி

Default Image

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை  மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது என பிரதமர் மோடி பேச்சு.  

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை காணொளி மூலம் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்பதை  மத்திய அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் சிகிச்சை பெரும் நோக்கில் சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மேலும் கொரோனா பரவல் குறித்து அவர் கூறுகையில்,  கொரோனா இன்னும் நீங்கவில்லை. மக்கள் இதை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்