பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
சீக்கிய குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்கலிடம் உரையாற்றுகிறார்.பிரதமர் மோடியின் உரை இன்று இரவு 9.15 மணியளவில் தொடங்கும் என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.பிரதமரின் உரை சமூகங்களுக்கு இடையேயான அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்து இருக்கும் என்று கூறப்படுகின்றது.
டெல்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவுடன் இணைந்து மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள இவ்விழாவில் 400 சீக்கிய இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும்.மேலும்,குரு தேக் பகதூர் வாழ்க்கையை சித்தரிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியும் நடைபெறும்.இவ்விழாவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் மற்றும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்.
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் காஷ்மீரி பண்டிட்டுகளின் மத சுதந்திரத்தை ஆதரித்ததற்காக குரு தேக் பகதூர் தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல்…
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…