Categories: இந்தியா

பிரதமர் மோடி பதிலுரை.. எதிர்கட்சிகள் கடும் அமளி..! சபாநாயகர் இருக்கை முற்றுகை….

Published by
மணிகண்டன்

டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

18வது மக்களவை கூட்டத்தொடர் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று மற்றும் இன்று மக்களவை உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர் . நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றியதை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி உரை ஆற்றுகிறார்.

அவர் பேசுகையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பதிலளிக்க நான் இங்கு வந்துள்ளேன். நமது குடியரசுத் தலைவர் அவரது உரையில் நமது நாட்டை பற்றியும் அதன் உறுதி பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். மேலும், குடியரசுத் தலைவர் முக்கியமான சில பிரச்சினைகளை அதில் குறிப்பிட்டுள்ளார் என்று கூறினார்.

மேலும் பேசுகையில், நேற்றும் இன்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவர் உரை குறித்த அவர்களது கருத்துக்களை கூறியுள்ளனர். குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களாக முதன்முறையாக வந்தவர்களும் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளார். அவர்கள் பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் பின்பற்றினர். அவர்களின் நடத்தை அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரைப் போல இருந்தது. அவர்களின் கருத்துக்களால் இந்த விவாதத்தை மிகவும் மதிப்புமிக்கதாக மாறியது.

உலகின் மிகப்பெரிய தேர்தல் விழாவில், பொதுமக்கள் எங்களை (பாஜக) தேர்ந்தெடுத்துள்ளனர், சிலரது (எதிர்க்கட்சிகள்) வேதனையை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து பொய்களை அவர்கள் பரப்பிய போதிலும், பெரும் தோல்வியை மட்டுமே அவர்கள் சந்தித்தனர்.

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்காக நாங்கள் உழைத்துள்ளோம். 2014ஆம் ஆண்டுக்கு முன்னர் ஊழல் செய்திகளே அதிகம் இடம்பெற்று வந்துள்ளன என்று பிரதமர் பதிலுரை ஆற்றி கொண்டு இருக்கும்போது எதிர்க்கட்சிகள் , ‘மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி பேச வேண்டும்’ என கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுப்பட்டனர். இருந்தும் பிரதமர் மோடி தனது பதிலுரையை தொடர்ந்து ஆற்றி வந்தார்.

எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால், ” பிரதமர் பேசும் போது கண்ணியத்துடன் உறுப்பினர்கள் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்கட்சியினரை கேட்டுக்கொண்டார். இருந்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் மக்களவையில் பெரும் சலசலப்பு நிலவி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

2 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

2 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

3 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

4 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

4 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

4 hours ago