குளிர்கால கூட்டத்தொடர் முதல் நாள்.! மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரை.!

Default Image

மக்களவை கூட்டதொடர் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். 

இன்று (டிசம்பர் 7) முதல் இம்மாதம் (டிசம்பர்) 29ஆம் தேதி வரையில் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 20கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றப்பட உள்ளன.

அதே போல , விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவாதங்களை முன்னெடுக்கவும் தயாராக உள்ளன. இதனால், இந்த கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தொடர் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதில், பேசுகையில், புதியதாக மாநிலங்களவை தலைவராக பொறுப்பேற்று முதல் கூட்டத்தொடரை நடத்தவுள்ள ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், தன்கர் விவசாயக்குடும்பத்தில் பிறந்தவர் , சைனிக் பள்ளியில் படித்தவர் என்றும் பிரதமர் மோடி கூட்டத்தொடரில் மாநிலங்களவை புதிய தலைவர் ஜெகதீப் தன்கருக்கு தனது வாழ்த்துக்களை கூறினார் பிரதமர் மோடி.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்