பிரதமர் கிசான் மன்தன் யோஜனாவின் கீழ் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.36000 பெறலாம்.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) மூலம் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 என ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மற்றொரு திட்டத்திலும் மாதாந்திர ஓய்வூதியம் வாங்க முடியும். பிரதமர் கிசான் மன்தன் யோஜனாவின் கீழ் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.36000 பெறலாம்.
உங்களுக்கு ரூ.36000 எப்படி கிடைக்கும் என்று தெரியுமா..?
பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 60 வயதிற்குப் பிறகு, விவசாயிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.36000 வழங்கப்படும். இந்த ஓய்வூதியத் திட்டத்தை நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. நீங்கள் பிரதமர் கிசானைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், இதற்கான கூடுதல் ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை.
இந்த திட்டத்தை யார் பயன்படுத்திக் கொள்ள முடியும்:
இதில் சேர நினைப்பவர்கள் maandhan.in என்ற இணைய முகவரியில் சென்று இணையலாம்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…