6 வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்..!

Published by
murugan

பிரதமர் நரேந்திர மோடி தனது அயோத்தி பயணத்தில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் வளர்ச்சிக்காக சுமார் ரூ.11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும், உத்தரப்பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுக்கு சுமார் ரூ.4600 கோடி மப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மறுவடிவமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர்   இரண்டு அமிர்த பாரத் மற்றும் ஆறு வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்படி, ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா-புது டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; அமிர்தசரஸ்-டெல்லி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; கோவை-பெங்களூரு கான்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; மங்களூர்-மட்கான் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஜல்னா-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் அயோத்தி கான்ட்-ஆனந்த் விஹார் டெர்மினஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள்  இயங்கவுள்ளது.

இந்த 6 வந்தே பாரத் ரயில்களில் 2 ரயில்கள் தெற்கு ரயில்வேயில் இணைந்துள்ளது. அதன்படி கோவை-பெங்களூரு கான்ட் செல்லும் கோயம்புத்தூர் வந்தே பாரத், மங்களூர்-மட்கான் செல்லும் மங்களூர் வந்தே பாரத் என இரண்டு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. மங்களூர் சென்ட்ரல்-மட்கான் சந்திப்பு வந்தே பாரத் ரயில் (20646/20645) வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும். ரயில் எண் 20646 மங்களூரு சென்ட்ரல் காலை 08.30 மணிக்கு புறப்படும். ரயில் மதியம் 1.15 மணிக்கு சென்றடையும். பதிலுக்கு, ரயில் எண் 20645 மட்கான் சந்திப்பில் இருந்து மாலை 06.10 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். வழியில் இந்த ரயில் உடுப்பி மற்றும் கார்வார் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

தமிழ்நாட்டிலும் சென்னை – கோவை, சென்னை – பெங்களூர், சென்னை- நெல்லை உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தகக்து.

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

1 hour ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

2 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

2 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

3 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

4 hours ago