தெலுங்கானாவில் திருமணம் நடத்தி வைக்க வந்த புரோகிதர் ஒருவர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கமணி குண்டுகளை திருடிச் சென்றுள்ளது வீடியோவில் அம்பலமாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்ரான் எனும் பகுதியில் கடந்த 16ம் தேதி ஞான சங்கர் தாஸ் மற்றும் வசந்தா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மந்திரங்கள் முழங்க புரோகிதர் ஒருவர் வந்து திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகள் அனைத்தும் மஞ்சள் குங்குமம் வைத்துள்ள தட்டில் வைத்து மணமேடையில் பூஜை செய்யப்பட்டுள்ளது. பூஜை நடந்து கொண்டிருக்கும் பொழுது அந்த புரோகிதர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துள்ளார்.
இதனை அடுத்து தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகளை காணவில்லை என திருமண வீட்டார் அதிர்ச்சி அடைந்து, திருமண வீடியோவில் பார்த்த பிறகு புரோகிதர் அந்த தங்கமணி குண்டுகளை தனது பாக்கெட்டில் எடுத்துப் போடுவது தெளிவாக பதிவாகியிருக்கிறது. இதனை அடுத்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த தங்கமணி குண்டுகளை திருடிய புரோகிதர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். வீடியோவை போலீசில் ஆதாரமாக குடும்பத்தினர் கொடுத்த நிலையில், போலீசார் தற்போது திருமண மண்டபத்தில் திருடிய புரோகிதரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…