பெண்களே உஷார்! பிரஷர் குக்கரை சரியாக கவனிக்காததால் கண்ணை இழந்த பெண்!

Published by
மணிகண்டன்

பெண்கள் வீட்டில் சமையல் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. தங்கள் வீட்டின் சமையலறையில் உள்ள கேஸ் அடுப்பு சரியான முறையில் உள்ளதா என்பதை கவனிப்பது மட்டுமல்லாமல் தான் பயன்படுத்தும் பிரஷர் குக்கர் சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்ப்பதும் மிக முக்கிய ஒன்றாகும். அப்படி தன் வீட்டு பிரஷர் குக்கரை சரியாக கவனிக்காததால் ஜார்கண்ட் மாநிலம் ஹண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண் தனது இடது கண் பார்வையை இழந்தார்.

அந்தப் பெண் தனது வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்துள்ளார்.  அப்போது பிரஷர் குக்கரில் பருப்பை வேக வைத்துள்ள அந்த பெண்,  தன்வீட்டு தோட்டத்தில் வேலை செய்துள்ளார். பின்னர் சமையலறைக்கு வந்து, அந்த குக்கர் எடுத்து பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அதிக ப்ரஷாருடன் குக்கர் விசில் எதிர்பாராதவிதமாக அவரது கண்ணுக்குள் சென்றது. பின்னர் வலியால் துடித்த அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அவரது தலையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் குக்கர் விசில், அந்த பெண்னின் இடது கண்ணின் வழியாக புகுந்து மூளை வரை சென்றுள்ளது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் அந்த விசில் அகற்றப்பட்டது. ஆனாலும் அந்த பெண்ணுக்கு இடது கண் பார்வை பறிபோகியுள்ளது.

பெண்கள் சமையல் பொருட்களையும், சமையல் பாத்திரங்கள் போன்றவற்றை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது, தற்போதைய காலத்தில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

37 minutes ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

1 hour ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

2 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

3 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

3 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

4 hours ago