Categories: இந்தியா

ஜம்முகாஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் …!

Published by
Venu

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல்  என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்  87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தல் நடந்தது.
Image result for மெகபூபா முஃப்தி

இதில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 28 இடங்கும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும், சுயேட்சைக்கு 7 இடங்களும் கிடைத்தன. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுக்குப்பின் பாஜக – மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது.திடீரென பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. கொள்கை அளவில் வெவ்வேறு துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் 26 மாதங்கள் சேர்ந்து ஆட்சியில் இருந்ததே மிகப்பெரிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மெகபூபா முப்தியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.

இந்த கூட்டணிக்கு பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய கூட்டணி வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்தது. 3 கட்சி தலைவர்களும் ஆளுநரை சந்தித்து நவம்பர் 21 ஆம் தேதி  ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்து .நவம்பர் 21 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.பின்  ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி.

பின்னர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியிருந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தை கலைத்து ஆளுநர் சத்யபால் மாலிக்  உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் குடியரசுத்தலைவரின் ஆட்சி அமல்  என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி இன்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது

Published by
Venu

Recent Posts

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

6 mins ago

மாப்ள – மச்சான் இடையிலான உறவு.. கவனம் ஈர்க்கும் ‘மெய்யழகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…

26 mins ago

துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !

அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…

40 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : சிறப்பு யாகம் நடத்தி ‘புனித நீர்’ தெளித்த தேவஸ்தானம்.!

திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…

2 hours ago

வார தொடக்கத்தில் உச்சம் தொட்ட தங்கம் விலை!

சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…

2 hours ago

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வரலாற்று சாதனை! பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…

2 hours ago