இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் காந்தி நினைவிடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது என்பது குறிப்பிடப்படுகிறது. இதையடுத்து அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஐதராபாத் இல்லத்துக்கு சென்றனர். இங்கு இரு நாட்டை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மோதிரா விளையாட்டு மைதானத்தில் நமஸ்தே டிரம்ப் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அங்கிருந்து ஆக்ரா சென்றார் டிரம்ப், அங்கு அவர், மனைவி மெலானியாவுடன் தாஜ்மகாலை சுற்றிப்பார்த்தனர். இறுதியாக நேற்று இரவு டெல்லியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…