நாளை இந்தியாவின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார்.
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாளை ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டுடன் நடந்த கார்கில் போர் நினைவு தினம் ஜூலை 26 அன்று கார்கில் நினைவிடத்தில் நடக்க உள்ளது. அதனால் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார்.
கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு 22 ஆவது கார்கில் போர் நினைவு தினமான ஜூலை 26 ஆம் தேதி கார்கில் நினைவிடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மரியாதை செலுத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செல்கிறார். மேலும், லடாக் பகுதியில் நடக்கவுள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவிருக்கிறார்.
ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். இதன் பின்னர் ஜூலை 27 ஆம் தேதி மாதா வைஷ்ணோ தேவி குகைக்கோவிலுக்கு சென்றுவிட்டு, அன்றே டெல்லிக்கு திரும்பவுள்ளார். குடியரசுத்தலைவர் வருகை தரவிருப்பதால் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…