ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் நாடே முடங்கியுள்ளது .ஒரு புறம் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் மறுபுறம் ஆந்திராவில் சோகமான நிகழ்வு ஓன்று அரங்கேறியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது.இதனால் அந்த தொழிற்சாலை அமைத்துள்ள பகுதிகளில் இருந்த மக்கள் மூச்சுத்திணறி கூட்டம் கூட்டமாக கீழே விழுந்தனர்.இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்ட நிலையில் 2000-க்கும் மேற்பட்டோர் விஷவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அந்த பகுதி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி,காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் .விஷவாயுவால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…
மும்பை : இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு இடையே ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி…