President Murmu [Image source : hindu]
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மூன்று நாள் பயணமாக சுரினாமுக்கு வந்தடைந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பிறகு, தென் அமெரிக்க நாட்டுடனான இந்தியாவின் இருதரப்பு நட்புறவை மேம்படுத்துவதற்காக அவர் முதல் முறையாக சுரினாம் வந்துள்ளார். சுரினாமின் ஜனாதிபதி, முழு அரசு மரியாதையுடன் திரௌபதி முர்முவை விமான நிலையத்தில் வரவேற்றார்.
ஜனாதிபதி முர்மு தனது சுரினாம் பிரதிநிதி சந்திரிகாபெர்சாத் சந்தோகியுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்த இருக்கிறார். தென் அமெரிக்க நாட்டிற்கு இந்தியர்கள் வருகையின் 150 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினராக கலந்துகொள்வார்.
ஜனாதிபதி ஜூன் 6 வரை சுரினாமில் இருப்பாராம். அங்கு வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று இந்திய சமூகத்தின் உறுப்பினர்களுடன் உரையாடவுள்ளார். பின்னர், செர்பியாவின் ஜனாதிபதியான அலெக்ஸாண்டர் வுசிக்கின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஜூன் 7 ஆம் தேதி செர்பியாவிற்கு செல்கிறார்.
செர்பியாவில், ஜனாதிபதி முர்மு ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் உடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார், மேலும் பிரதமர் அனா பிரனாபிக் மற்றும் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் விளாடிமிர் ஓர்லிக் ஆகியோரை சந்திப்பார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…