டெல்லியில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

Published by
பாலா கலியமூர்த்தி

நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதற்கு முன்பு டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, அவரது மாளிகையில் (ராஷ்டிரபதி பவன்) இருந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில் குடியரசு தினவிழா நடைபெறும் கடமை பாதைக்கு (கர்தவ்யா) அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது, குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும்  உடனிருந்தார். இதன்பின், ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் கடமைப்பாதைக்கு வருகை தந்தனர். அப்போது, தேசிய கொடியை ஏற்றுவதற்காக வருகை தந்த குடியரசு தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் பிரான்ஸ் நாட்டு அதிபரை பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார்.

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!!

இதனைத்தொடர்ந்து, 75-ஆவது குடியரசு தினவிழாவையொட்டி, டெல்லியில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு. 21 குண்டுகள் முழங்க டெல்லி கடமை பாதையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் குடியரசு தலைவர். இவ்விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் பங்கேற்றுள்ளனர்.

இதன்பின், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு ஏற்றார். இதைத்தொடர்ந்து, குடியரசு தினவிழாவையொட்டி கடமை பாதையில் முதன்முறையாக 100க்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள் இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தி வருகிறார். இந்தக் கலைஞர்கள் இசைக்கும் சங்கு, நாதஸ்வரம் போன்ற இசையுடன் அணிவகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Recent Posts

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

9 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

3 hours ago