உச்சநீதிமன்றத்தில் நேற்று மாலை தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்படுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் கன்ஷ்யம் உபாத்யாய் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைனியில் இருந்து கைது செய்யப்பட்ட பின்னர் துபே ஒரு “போலி” என்கவுண்டரில் கொல்லப்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் துபே உத்தரப்பிரதேச காவல்துறையினர் அவரது காவலைப் பெற்றவுடன் மற்ற சக குற்றவாளிகளைப் போலவே கொல்லப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஜூலை 2 -ம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு விகாஸ் துபே நான்கு கூட்டாளிகள் கொல்லப்பட்டபோது செய்ததைப் போலவே உத்தரப்பிரதேச காவல்துறையும் துபேக்கு அதே கதையை உருவாக்கும்” என்று உபாத்யாய் கூறினார்.
தனக்கு துபே மீது எந்த அனுதாபமும் இல்லை என்று கூறினார்.துபே மீது 60 கிரிமினல் வழக்குகள் இருந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தங்கள் கடமையை நேர்மையாக நிறைவேற்றாததாலும், ஊழலில் ஈடுபட்டதாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்தார் என்று வழக்கறிஞர் கூறினார்.
கான்பூர் என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே இன்று காலை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…
டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…